சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
8.105.08   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் -VIII. ஆனந்தத்து அழுந்தல் (71-80)
பண் - ஈசனோடு பேசியது போதுமே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvasagam2/05.08 Thirusadhagam.mp3
புணர்ப்ப தொக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய்
புணர்ப்ப தன்றி தென்ற போது நின்னொ டென்னொ டென்னிதாம்
புணர்ப்ப தாக அன்றி தாக அன்பு நின் கழல் கணே
புணர்ப்ப தாக அம் கணாள புங்கம் ஆன போகமே
[71]
போகம் வேண்டி வேண்டி லேன் புரந்த ராதி இன்பமும்
ஏக நின் கழல் இணை யலா திலேன் என் எம்பிரான்
ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக் கணே
ஆக என் கை கண்கள் தாரை ஆற தாக ஐயனே

[72]
ஐய நின்ன தல்ல தில்லை மற்றோர் பற்று வஞ்சனேன்
பொய் கலந்த தல்ல தில்லை பொய்மை யேன்என் எம்பிரான்
மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல் கணே
மெய் கலந்த அன்பர் அன்பெ னக்கும் ஆக வேண்டுமே

[73]
வேண்டும் நின்கழல் கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்ம்மையே
ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ
பூண்டு கொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும்என்றும்
மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின் வணங்கவே

[74]
வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலமிட்டு
உணங்கும் நின்னை எய்த லுற்று மற்றோர் உண்மை இன்மையின்
வணங்கி யாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு
இணங்கு கொங்கை மங்கை பங்க என்கொலோ நினைப்பதே

[75]
நினைப்ப தாக சிந்தை செல்லும் எல்லை ஏய வாக்கினால்
தினைத்தனையும் ஆவ தில்லை சொல்லல் ஆவ கேட்பவே
அனைத் துலகும் ஆய நின்னை ஐம் புலன்கள் காண்கிலா
எனைத்எனைத்த தெப் புறத்த தெந்தை பாதம் எய்தவே?

[76]
எய்தல் ஆவ தென்று நின்னை எம்பிரான் இவ் வஞ்சனேற்கு
உய்தல் ஆவது உன்கண் அன்றி மற்றோர் உண்மை இன்மையின்
பைதல் ஆவ தென்று பாது காத் திரங்கு பாவியேற்கு
இஃது அலாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே

[77]
ஈசனே நீ அல்ல தில்லை இங்கும் அங்கும் என்பதும்
பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என்எம்பிரான்
நீசனேனை ஆண்டு கொண்ட நின் மலா ஒர் நின்அலால்
தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே.

[78]
சிந்தை செய்கை கேள்வி வாக்கு சீரில் ஐம் புலன்களால்
முந்தை ஆன காலம் நின்னை எய்தி டாத மூர்க்கனேன்
வெந்தையா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன்
எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற் றிருப்பனே.

[79]
இருப்பு நெஞ்ச வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்ன தாள்
கருப்பு மட்டு வாய் மடுத் தெனைக் கலந்து போகவும்
நெருப்பும் உண்டு யானும் உண்டி ருந்த துண்ட தாயினும்
விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்ப தென்ன விச்சையே

[80]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list